Home இலங்கை சென்.கிளயார் வனப்பகுதியில் தீப்பரவல் -30 ஏக்கர் தீக்கிரை

சென்.கிளயார் வனப்பகுதியில் தீப்பரவல் -30 ஏக்கர் தீக்கிரை

by admin

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை – சென்.கிளயார் வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் சுமார் 30 ஏக்கர்வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

தலவாக்கலை – சென்.கிளயார் வனப்பகுதி நேற்று (28.02.2021) இரவு 7 மணி முதல் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

இதனையடுத்து தலவாக்கலை காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர்.

எனினும், தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தீ வேகமாக பரவி சுமார் 30 ஏக்கர் வரை தீக்கிரையானது.

மனித செயற்பாடு மூலமே இத்தீப்பரவல் ஏற்பட்டிருக்கும் என சந்தேகிக்கும் காவல்துறையினர், அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். #தலவாக்கலை #சென்_கிளயார் #வனப்பகுதி #தீப்பரவல் #தீக்கிரை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More