Home இலங்கை கடல் வழியாக, வெளிநாடு செல்ல முற்பட்ட, யாழ், முல்லை, மட்டு, திருமலை வாசிகள் கைது!

கடல் வழியாக, வெளிநாடு செல்ல முற்பட்ட, யாழ், முல்லை, மட்டு, திருமலை வாசிகள் கைது!

by admin


கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் நேற்று ( 11.03.21) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடிபெயர தயாரான 24 பேரை கடற்படை கைது செய்தது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் கல்பிட்டி களப்புக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பாரஊர்தி ஒன்று சோதனை செய்யப்பட்டதுடன் அவ் வண்டிக்குள் இருந்த சந்தேக நபர்களிடம் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர் அப்போது குறித்த பார ஊர்தி சாரதியுடன் 24 நபர்கள் இலங்கையிலிருந்து வேறொரு நாட்டிற்கு குடிபெயரத் தயாராகி கல்பிட்டி களப்பு பகுதியில் இருந்து ஒரு படகு வரும் வரை காத்திருப்பது தெரியவந்ததால், அந்தக் குழுவினர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பார ஊர்தியும் கைப்பற்றப்பட்டது.

கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 நபர்களில் 20 ஆண்கள், ஒரு பெண் (01), இரண்டு பெண் குழந்தைகள் (02) மற்றும் ஒரு சிறுவன் (01) உள்ளனர். இவர்களில் 09 பேர் மட்டக்களப்பு பகுதியிலும், 6 பேர் யாழ்ப்பாணம் பகுதியிலும், 05 பேர் முல்லைதீவு பகுதியிலும், 03 பேர் திருகோணமலை பகுதியிலும், பார ஊர்தியின் சாரதி புத்தளம் பகுதியிலும் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கடத்தலைத் திட்டமிட்ட நபரும் இந்தக் குழுவில் இருப்பதாக கடற்படை சந்தேகிக்கிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் அவர்களது பார ஊர்தியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையில், கடலில் இதுபோன்ற சட்டவிரோத இடம்பெயர்வு முயற்சிகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More