Home இலங்கை பருத்தித்துறையில் வளர்ப்பு பிராணிகளை படுகொலை செய்த கும்பல்

பருத்தித்துறையில் வளர்ப்பு பிராணிகளை படுகொலை செய்த கும்பல்

by admin

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், வளர்ப்பு நாய் மற்றும் புறாக்களை அடித்துக் கொலை செய்தும்  பெறுமதியான பொருள்களை உடைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. 

வீட்டில் உள்ளவர்கள் சிவராத்திரி வழிபாட்டுக்காக ஆலயத்துக்கு சென்றிருந்த நிலையில் இந்தப் பாதக செயலை கும்பல் நடத்தியுள்ளது. 

“வீட்டில் மூவர் வசிக்கின்றனர். அவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு ஆலயத்துக்குச் சென்றுள்ளனர். அதிகாலை வீடு திரும்பிய போதே வீட்டினுள் அத்துமீறி கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டமையை அவதானித்தனர். 

வளர்ப்பு நாய் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், புறாக் கூட்டை சேதப்படுத்தி புறாக்களையும் கொலை செய்துள்ளனர். அத்துடன் வீட்டினுள் இருந்த பெறுமதியான பொருள்கள் அடித்துச் சேதப்படுத்தபட்டிருந்தன.

 சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினாிடம் முறைப்பாடு செய்யப்பட்டதனையடுத்து சம்பவம் இடம்பெற்ற வீட்டில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 இந்தப் படுபாதகச் செயலுக்கான பின்னணி தொடர்பில் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனர். இதேவேளை, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் அண்மைய நாள்களாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற போதும்காவல்துறையினா் துரித நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது #பருத்தித்துறை #வளர்ப்பு_பிராணி #படுகொலை #சிவராத்திரி #சுப்பர்மடம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More