Home பிரதான செய்திகள் இலங்கைக்கெதிரான தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது

இலங்கைக்கெதிரான தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது

by admin

இலங்கைக்கெதிரான தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணஜ தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதல்லி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து, 274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 274 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. #இலங்கை #மேற்கிந்தியதீவுகள் #கிரிக்கெட்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More