Home இலங்கை 40 தமிழக மீனவர்கள் விடுதலை – ராமேஸ்வரத்தினை சென்றடைந்தனா்.

40 தமிழக மீனவர்கள் விடுதலை – ராமேஸ்வரத்தினை சென்றடைந்தனா்.

by admin


இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தமது படகுகள் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை கடல்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட   குற்றச்சாட்டில் 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டிருந்தனா்


இந்நிலையில் இன்று காலை நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடராமல் படகுகளுடன் விடுதலை செய்து தாயகத்துக்கு திருப்பி அனுப்புமாறு     ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்  சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.


இதனையடுத்து திருகோணமலை மற்றும் காரைநகர் கடற்படை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்களையும்; அவர்களது நான்கு படகுகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ததுடன்
இலங்கை கடற்படையினா் சர்வதேச கடல் எல்லையில் வைத்து  மீனவர்களை படகுடன்   அனுப்பி வைத்துள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தங்களது மீன் பிடி விசைப்படகுகளுடன்  இன்று வெள்ளிக்கிழமை மாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தினை சென்றடைந்துள்ளனா். #தமிழக_மீனவர்கள் #விடுதலை #ராமேஸ்வரம்


Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More