Home இலங்கை மீண்டும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றிற்கு தடை!

மீண்டும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றிற்கு தடை!

by admin

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய வர்த்தமானி அறிவுப்புக்கு அமைவாக,

பிரித்தானிய தமிழர் பேரவை British Tamils Forum (BTF) ,

கனடிய தமிழ் காங்கிரஸ் Clinical Trial Consulting (CTC),

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் Australian Tamil Congress (ATC),

உலகத் தமிழர் பேரவை Global Tamil Torum (GTF),

கனடிய தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) ,

தமிழ் இளையோர் அமைப்பு Tamil Youth Organisation UK (TYO-UK, France, australia, switzerland, Canada),

உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு World Tamil Coordinating Committee (WTCC) ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைப்புகள் சார்ந்த தனி நபர்களின் பெயர்களும் இந்த தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த அமைப்புகளுக்கு முன்னர் விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டதோடு பல தனிநபர்களின் பெயர்களும் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/wp-content/uploads/2021/03/LIST.pdf

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More