Home இலங்கை கோவில் வீதி போக்குவரத்திற்கு மீள திறப்பு!

கோவில் வீதி போக்குவரத்திற்கு மீள திறப்பு!

by admin

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி இன்று முதல்  போக்குவரத்து மீள திறக்கப்பட்டுள்ளது.

நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக கடந்த 08ஆம் திகதி முதல் அந்த வீதியினூடாக  போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இதற்கு மாற்றுப் பாதையாக நல்லூர் ஆலயத்திலிருந்து கோவில் வீதியுடாகச் செல்லும் சிறிய வாகனங்கள் செட்டித்தெரு வீதி செட்டித்தெரு ஒழுங்கை ( சின்னமயா மிஷன் வீதி) ஊடாகவும் நாவலர் வீதியிலிருந்து நல்லூர் ஆலயத்துக்கு கோயில் வீதியில்
பயணிக்கும் வாகனங்கள் செட்டித்தெரு ஒழுங்கை செட்டித்தெரு ஊடாகவும் பயணித்தன.

இந்நிலையில் தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்ததமையை அடுத்து குறித்த வீதி போக்குவரத்துக்காக மீள திறக்கப்பட்டுள்ளது  #கோவில்வீதி #போக்குவரத்திற்கு #திறப்பு #நல்லூர்_ஆலயம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More