Home இலங்கை ராசிக் மொஹமட் பாருக்கை கண்டால், 1 மில்லியன் ரூபாய் பரிசு என்கிறது அரசாங்கம்!

ராசிக் மொஹமட் பாருக்கை கண்டால், 1 மில்லியன் ரூபாய் பரிசு என்கிறது அரசாங்கம்!

by admin

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து, நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை காவற்துறையினர் நாடியுள்ளனர்.

அதற்கமைய, இந்த நபர் தன்னை வைத்தியர், பொறியியலாளர், ஆசிரியர், வர்த்தகர் என இனம்காட்டிக்கொண்டு, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தன்னை வைத்தியராக அடையாளப்படுத்திக்கொண்டு, கொள்ளையடிக்கப்பட்ட வாகனமொன்றை 165 இலட்சத்துக்கு பெற்றுக்கொண்டமை, 1550000 ரூபாய் பெறுமதியான வாகனத்தை போலி கையெழுத்தைப் பயன்படுத்தி பெற்றுக்கொண்டமை, 30 இலட்சம் பெறுமதியான வானை கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த சந்தேகநபர் மேலும் பல மோசடிகளில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ள காவற்துறையினர் , இவரைக் கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபரின் பெயர் ராசிக் மொஹமட் பாருக் என்பதுடன், இவர் இலக்கம்.122/15 பி மாங்கட வீதி, கடவத்த, 133/05 நாமல் டெரன்ஸ், வட்டியகொட, 89/03 ரஜமாவத்த, கனுவன, ஜாஎல ஆகிய முகவரிகளைச் சேர்தசர என்றும் தெரிவித்துள்ள காவற்துறையினர் இவரைக் கண்டுபிடித்துகக் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் ரூபாயை அன்பளிப்பாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே இவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், 071- 8592604, 0112-2685958 ஆகிய ​தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More