Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

by admin

ஈராண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் தீபமேற்றி அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று (21) முற்பகல் அலரி மாளிகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதுடன், தீபமேற்றி அவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தார்.

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரையும் நினைவுகூர்ந்து முற்பகல் 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பிரதமர், அதனை தொடர்ந்து தீபமேற்றி அவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தார். குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமருடன் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஸவும் கலந்து கொண்டார்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான நிமல் லன்சா, இந்திக அனுருத்த மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More