Home இலங்கை குடத்தனையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு -வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பியோட்டம்

குடத்தனையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு -வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பியோட்டம்

by admin

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் , கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
குடத்தனை பகுதியில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் வந்த “கன்ரர்” ரக வாகனத்தை மறித்துள்ளனர். 

வாகனம் கடற்படையினரின் கட்டளையை மீறி சென்ற போது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். அதன் போது வாகனத்தில் பயணித்தவர்களும் , வாகனத்திற்கு வழி காட்டியாக சென்றதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒட்டி ஒருவரும் தமது வாகனங்களை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர். 


அதனை அடுத்து கன்ரர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடற்படையினர் மீட்டதுடன் , பருத்தித்துறை காவல்துறையினருக்கும் தகவல் வழங்கினார்கள். 


தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வாகனங்களை பொறுப்பேற்றதுடன் , விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.  தப்பி சென்றவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More