Home இலங்கை பயணக் கட்டுப்பாடு விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்படும்

பயணக் கட்டுப்பாடு விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்படும்

by admin

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் பயண கட்டுப்பாடு விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தொிவித்துள்ளாா்.

அத்தியாவசிய கடமைகளுக்காக செல்லும் ஊழியர்கள் தவிர ஏனையோர் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய கடமைகளுக்காக செல்வோர் தமது கடமைக்கான அடையாள அட்டையை அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் என அவா் தொிவித்துள்ளாா்

மேலும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள் நடத்துவோர் தொடர்பில் கடும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் சட்டவிரோத குற்றம் புரிந்தவர்கள் என கருதப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினா் கடமை சார்ந்த விடயங்களுக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ அந்த பிரதேசத்தில் இருந்து வெளியே செல்வது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More