Home இலங்கை இலங்கையில் சீரற்ற காலநிலையால் 05 பேர் பலி!

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 05 பேர் பலி!

by admin



கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை தெவனகல கந்த மற்றும் வரக்காபொல அல்கம கந்த என்ற இடங்களில் இடம்பெற்ற மண் சரிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் மேலும் 03 பேர் காணாமல் போயிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.. இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். புத்தளம் மாதம்பை பிரதேசத்திலும் ஹொரண பிரதேசத்திலும் குளிக்கச் சென்ற 2 பேர் நேற்று (04) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் மகாவெவ குளத்திற்கு நீராடச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளார். கம்பகா நகரம் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் பல வீடுகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர். சில இடங்கள் 5 அடி உயரத்தில் நீரில் மூழ்கி உள்ளன.

நீர் வழிந்தோடும் பகுதி அடைப்பட்டுள்ளமையே இதற்கான பிரதான காரணமாகும். அத்தனகல்ல ஓயாவும் ஊறுகல் ஓயாவினாலும் வெள்ள அனர்த்தநிலை ஏற்பட்டுள்ளது.

இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கட்டடம் ஒன்று ஒன்றின் மீது மண் திட்டு இடிந்து விழுந்து இருப்பதால் பல வகுப்பறைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது புத்தளம் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் வழிந்து ஓடுவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More