Home இலங்கை மன்னாாில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரிப்பு

மன்னாாில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரிப்பு

by admin

மன்னார் மாவட்டத்தில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 522 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.


அவர் இன்று (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தினைத் தொிவித்துள்ளா்ா.

மேலும் இந்த மாதம் தற்போது வரை 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும்
கடந்த 3 ஆம் திகதி நானாட்டான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 383 பீ.சி. ஆர். பரிசோதனைகளின் போது மன்னார், அரிப்பு,சாந்திபுரம், வவுனியா,யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் மடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 132 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது  2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவும் தொிவித்த அவா் மேலும் 787 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.எனவும் தெரிவித்தார். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More