74
யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் இரண்டு நாள்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் கொவிட்-19 சிகிச்சை பிரிவில் உயிரிழந்துள்ளார்.. இன்று ஞாயிற்றுக்கிழமை அளவெட்டியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இருவரினது சடலங்களும் கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது.
Spread the love