Home இலங்கை “அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது”

“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது”

by admin

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எரிபொருள்களின் விலை அதிகரிப்புத் தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் நியாயமில்லை எனத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரன, அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தாலும், அரசாங்கத்தின் அனைத்துத் தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எரிபொருள்களின் விலை அதிகரிப்புத் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம், அரசாங்கத்தின் தீர்மானமெனவும் கூறிய அவர், எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர், மேலும் தெரிவித்தார்.

ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தே அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது உண்மை. ஆனால் அரசாங்கத்துக்குள் உள்ள ஏனைய கட்சிகளுக்கும் கௌரவமளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகத் தாம் இருந்தாலும், அரசாங்கமெடுக்கும் அனைத்துத் தீர்மானங்களுக்கும் தாம் உடன்படப்போவதில்லை எனவும் தெரிவித்த அவர், உதய கம்மன்பிலவுக்கு எதிரான சாகர காரியவத்தின் அறிக்கை, அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிக் கொள்கைகளுக்கு எதிரானதெனவும் அவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More