Home உலகம் சோமாலியா இளைஞரின் தாக்குதலில் ஜேர்மனியில் மூவர் பலி – பலர் காயம்!

சோமாலியா இளைஞரின் தாக்குதலில் ஜேர்மனியில் மூவர் பலி – பலர் காயம்!

by admin

கத்தியுடன் காணப்பட்ட நபர் ஒருவர் பொதுமக்கள் மீது மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலில் குறைந்தது மூவர்உயிரிழந்தனர். பத்துப்பேர் வரை காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் பவேறியா மாகாணத்தில் (Bavarian State) Würzburg நகரில் பொது இடம் ஒன்றில் இன்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதலாளி கத்தியுடன் தோன்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. காவல்துறையினா் விரைந்து வந்து காலில் சுட்டுக் கைது செய்யும் வரை அந்த நபர் எதிர்ப்பட்ட அனைவரையும் வெறித்தனமாக வெட்டிக் கொத்தித் தாக்கியுள்ளார்.

சம்பவம் நடந்த பகுதியை காவல்துறையினா் சுற்றிவளைத்து மூடினர். மக்கள் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களது படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர வேண் டாம் என்றும் காவல்துறை தலைமையகம் அதன் ருவீற்றர் பதிவில் கேட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் 24 வயதான சோமாலியா நாட்டவர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அவரது நோக்கம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. சம்பவம் குறித்து பவேறியா மாநில பிரதம அமைச்சர் அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டுள் ளார்.

ஜேர்மனியில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் புறம்பாக வெளிநாட்டவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களால் நடத்துகின்ற கொலை வெறித்தாக்குதல்களும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. —————————————————————–

குமாரதாஸன். பாரிஸ்.25-06-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More