Home இலங்கை முகக்கவசம் இன்றி பொது நிகழ்வில் வடக்கு ஆளுநர்

முகக்கவசம் இன்றி பொது நிகழ்வில் வடக்கு ஆளுநர்

by admin

யாழ்.கலாச்சார மத்திய நிலையம் மற்றும் யாழ்.மத்திய கல்லுாரி ஆகியவற்றுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பார்வையிடுவதற்காக சென்றிருந்த நிலையில், வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் முககவசம் அணியாமல் கலந்து கொண்டிருந்தார். 

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் சென்றிருந்த நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது வடமாகாண ஆளுநர் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

முகக் கவசம் அணிவது கட்டாயமானது. முக கவசங்களை சரியான முறையில் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படட்டு வருகின்றன.

நாடளாவிய ரீதியில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் முகக் கவசங்களை அணியாதமைக்காகவும் , ஒழுங்கான முறையில் முகக் கவசம் அணியவில்லை எனும் குற்ற  சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பொது நிகழ்வொன்றில் ஆளூநர் முகக் கவசம் அணியாது கலந்து கொண்டுள்ளார்.இது தொடர்பில் பொலிஸாரோ , சுகாதார பிரிவினரே எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பலரும் விசனம் தெரிவித்தனர்   

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More