Home இலங்கை ராஜபக்ஸகள் யுகம் இலங்கையில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்!

ராஜபக்ஸகள் யுகம் இலங்கையில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்!

by admin

அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஸக்கள் யுகம் இலங்கையில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இணையான கட்சியொன்று விரைவில் உருவாக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

கொழும்பில் வைத்து நேற்று முன்தினம் (29.06.21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாடு தற்போது முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலைமைகளில் இருந்து, பசில் ராஜபக்ஸவால் நாட்டை மீட்க முடியாது. பசிலால் மட்டுமல்ல இந்த அரசாங்கத்திலுள்ள ஏனையோராலும் அதனைச் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் பசில் இருந்தார். அப்போது அவர் செய்தது என்ன?
ராஜபக்‌ஸக்களுக்கு அரசாங்கத்தில் மற்றொரு பதவியை வழங்கி. முழு நாட்டையும் ராஜபக்‌ஸக்களுக்கு வழங்கும் செயற்பாடு என சாடினார்.

மஹிந்த ராஜபக்‌ஸவை தவிர்த்து ஏனைய ராஜபக்‌ஷக்கள் அனைவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே. பசில், சிராந்தி, புஸ்பா அல்லது ராஜபக்‌ஸக்களின் குடும்பத்தில் தற்போது பிறந்திருக்கும் குழந்தைகள்; அரசியலுக்கு வந்தாலும், நாட்டை நாசமாக்குவதைத் தவிர்த்து அவர்களால் வேறு எதனையும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இணையான கட்சி ஒன்றை அமைப்போம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருக்கும்போதே எதனையும் செய்யவில்லை. அமைச்சர் பதவிகளைக் கொண்டா எதனையும் செய்துவிடப் போகிறார்? அவர் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதே நல்லது எனவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More