Home இலங்கை தீக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

தீக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

by admin

எரிகாயங்களுக்குள்ளான 2 பிள்ளைகளின் தாயார் சிகிச்சை பயனின்றி யாழ்.போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார். கணவன் அடுப்படியில் பெற்றோல் போத்தலை வைத்ததை  அறியாமல் தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் அவர் எரிகாயங்களுக்குள்ளானார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (வயது- 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார்.

கடந்த 22ஆம் திகதி மதியம் நின்று சமைக்கும் விறகு அடுப்பில் தேநீர் வைப்பதற்கு மண்ணெண்ணைய் ஊற்றி நெருப்பை வைத்துவிட்டு தீக்குச்சியை கீழே போட்டுள்ளார்.

அடுப்புக்கட்டுக்கு கீழே கணவர் பெற்றோல் போத்தலை வைத்திருந்தமை தெரியாமல் நெருப்பு குச்சை போட்டமையால், பெற்றோல் போத்தல் வெடித்து எரிந்தமையால் ஏற்பட்ட தீவிபத்தில் அவர் சிக்கியுள்ளார். உடம்பில் தீப்பற்றியதால் அவர் கிணற்றுக்குள் விழ்ந்துள்ளார்.

எரிகாயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 5 நாள்கள் முன்னெடுக்க சிகிச்சை பயனின்றி குடும்பப் பெண் நேற்று காலை உயிரிழந்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்று மேற்கொண்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More