Home இலங்கை யாழில் கடந்த 5நாட்களில் ஒரு இலட்சம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது!

யாழில் கடந்த 5நாட்களில் ஒரு இலட்சம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது!

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுடன் ஐந்து நாள்களில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 376 பேர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களிலும் ஒரு இலட்சம் பேருக்கு முதலாவது தடவை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 50 ஆயிரம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

தற்போது 3 ஆம் கட்டமாக இரண்டு இலட்சம் பேருக்கு முதலாவது தடவையாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் ஐந்தாவது நாளும் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ரீதியாக 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இன்றைய ஐந்தாவது நாளில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் மற்றும் வைத்தியசாலைகளில் என 22 ஆயிரத்து 34 பேர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More