Home இலங்கை ஜனாதிபதி சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும்

ஜனாதிபதி சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும்

by admin

தகவலறியும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிா்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடைய உள்ளதாகத் தெரிவித்துள்ள ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் ஸ்ரீலங்கா அமைப்பு 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஆணையாளர், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர், ஏனைய உறுப்பினர்கள் நியமிக்கப்படும்போது,  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து பரிந்துரைகள் பெறுவது நாடாளுமன்ற பேரவையின் பொறுப்பு எனவும்  அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் 19ஆவது திருத்தச் சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புப் பேரவை போலல்லாது, யாரை நியமிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு வெளிப்படையாக நாடாளுமன்ற பேரவையால் பெயர்களைப் பரிந்துரைக்க முடியாது எனவும் . வெறும் அவதானிப்புக்களை மாத்திரமே செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவுக்கு நியமனங்களை மேற்கொள்ளும்போது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஜனாதிபதி கருத்திற்கொள்ளவாரென தாம் எதிர்பார்ப்பதாகவும், ஜனநாயகத் தன்மை தொடர்ந்து நிலைநாட்டப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More