Home இலங்கை நாளொன்றில் 8 -10 சடலங்கள் தகனம் – 2 தகனச் சாலைகளுக்கு தற்காலிக பூட்டு!

நாளொன்றில் 8 -10 சடலங்கள் தகனம் – 2 தகனச் சாலைகளுக்கு தற்காலிக பூட்டு!

by admin

இரத்தினபுரி மாநகர சபைக்குரிய 2 தகனச்சாலைகள், திருத்த வேலைகள் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென, இரத்தினபுரி மாநகர சபையின் நகராதிபதி டிரோன் அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த தகனச்சாலைகளில் 150 சடலங்கள் தகனம் செய்ததன் பின்னர், தகனச்சாலைகளில திருத்த வேலைகள் செய்ய வேண்டும் என்றும் எனினும் கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு 8- 10 சடலங்கள் தகனம் செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தமுறை பராமரிப்பு பணிகள் நிறைவுற்றதும் இதுவரை 700க்கு அண்மித்த சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த 2 தகனச்சாலைகளையும் திருத்தம் செய்யும் அவசியம் ஏற்பட்டுள்ளதால் அவற்றின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More