Home இலங்கை மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாகடத்தல் முயற்சி முறியடிப்பு

மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாகடத்தல் முயற்சி முறியடிப்பு

by admin


மன்னார் இலுப்பைக்கடவை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கூராய் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் இடம் பெறுவதாக  கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு  பிரிவினரால் கல்பிட்டி பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சித்த 131 கிலோ 725 கிராம் ,கேரள கஞ்சா போதைப்பொருள்  நேற்று செவ்வாய்க்கிழமை(10) கைப்பற்றப்பட்டுள்ளது 


மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில் மேற்படி கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்திய கூலர் வாகனம் மற்றும் 2 சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்டுள்ளனா்.


கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும்   கல்பிட்டி பகுதியை சேர்தவர்களாவர்.
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கூலர் வாகனம் என்பன மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.

கைப்பற்றபட்ட கேரள கஞ்சா மூன்று கோடியே ஐம்பது லட்சத்துக்கு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More