Home இலங்கை காவற்துறையினரின் துப்பாக்கிச்சூடு – இளைஞன் படுகாயம்!

காவற்துறையினரின் துப்பாக்கிச்சூடு – இளைஞன் படுகாயம்!

by admin

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், காவற்துறையினரின் சமிக்கையை மீறி பயணித்தமையால், அதன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம், மட்டக்களப்பு – கரடியனாறு, பங்குடாவெளிச் சந்தியில், இன்று (12.08.21) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து, உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது, குறித்த உழவு இயந்திரத்தை காவற்துறையினர் நிறுத்த முயற்சித்துள்ளனர். எனினும், காவற்துறையினரின் சமிக்கையை மீறி உழவு இயந்திரம் சென்ற நிலையில், காவற்துறையினர் அதனை துரத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து, உழவு இயந்திரம் மீது மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அதில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ்.துசாந்தன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவம், கரடியனாறு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More