இலங்கை பிரதான செய்திகள்

காவல்துறையினர் முன்பாக சிதறு தேங்காய் உடைத்து , கற்பூரம் ஏற்றிய பக்தர்கள்

நல்லூரானை தரிசிக்க வந்த அடியவர்கள் காவல்துறையினர் முன்னிலையில் வீதியில் தேங்காய் உடைத்து,  கற்பூரம் கொளுத்தி , மலர் தூபி வணங்கி சென்றனர். நல்லூரான் கொடியேற்ற நிகழ்வை நேரில் கண்டு, நல்லூரானை வணங்கி செல்ல வந்த பக்தர்களை ஆலய சூழலுக்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்தமையால் , வீதியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். 


கொடியேற்ற நிகழ்வு முடிவடைந்ததும் , நல்லூரானுக்கு உடைக்க கொண்டு வந்திருந்த சிதறு தேங்காயை, காவல்துறையினருக்கு முன்பாக  வீதியில் உடைத்து , வீதியில் கற்பூரம் கொளுத்தி , நல்லூரானுக்கு தூவ கொண்டு வந்திருந்த மலர்களை வீதியில் தூவி , வீதியிலையே விழுந்து வணங்கி சென்றனர். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.