Home இலங்கை மோட்டார் சைக்கிளை மறித்து உதவி கேட்டவர் சங்கிலியை அறுத்த நிலையில் கைது

மோட்டார் சைக்கிளை மறித்து உதவி கேட்டவர் சங்கிலியை அறுத்த நிலையில் கைது

by admin

மோட்டார் சைக்கிளை மறித்து ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு உதவியளிக்க முற்பட்டவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் இன்றிரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் சிவலிங்கப்புலியடியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து சங்கிலியை அபகரித்துச் சென்றவர் ஒரு சில மணி நேரத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கிக்கொண்டார். சந்தேக நபரிடமிருந்து சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

வீதியில் மோட்டார் சைக்கிளிலில் சென்றவரை வழிமறித்த ஒருவர் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கேட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அவர் அணிந்த 6 தங்கப்பவுண் தங்கச் சங்கிலியை அறுத்து தப்பித்து ஓடியுள்ளார்.சங்கிலியை பறிகொடுத்தவர் துரத்திச் சென்ற போதும் பிடிக்க முடியவில்லை.


சம்பவம் தொடர்பில் அறிந்த யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினர் சங்கிலியை பறிகொடுத்தவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்,  சந்தேக நபரை கைது செய்தனர். சந்தேக நபரிடமிருந்து தங்கச் சங்கிலி கைப்பற்றப்பட்டது.


வண்ணார்பண்ணை ஓடை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலிருந்து அண்மையில்தான் விடுவிக்கப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More