Home இலங்கை பருத்தித்துறையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

பருத்தித்துறையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

by admin

பருத்தித்துறை சுப்பர் மட பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 
நெல்லியடி காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த வைரவ நாகரத்தினம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


பருத்தித்துறை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுப்பர் மட பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது. 


குறித்த சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த நபர் நெல்லியடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இராஜ கிராமம் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 


அதேவேளை பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


இதேவேளை குறித்த நபர் நேற்றைய தினம் இரவு அவ்விடத்திலிருந்து சத்தமாக பாடல்களை பாடிக்கொண்டு இருந்ததாகவும், காலையில் சடலமாக காணப்பட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More