Home இலங்கை யாழில் 2ஆம் அலகு தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

யாழில் 2ஆம் அலகு தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியின் முதலாவது அலகைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது அலகை வழங்கும் பணி இன்று திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது. 

வடமாகாணத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3ஆம் கட்டத்தின் முதலாவது தடவை தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடைபெற்று வந்தன.

அவ்வாறு தமது முதலாவது அலகு தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான இரண்டாவது அலகு தடுப்பூசிகள் இன்று  ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முதல் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழான ஜே / 111 , ஜே / 112, ஜே / 114 மற்றும் ஜே 122 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கு திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More