Home இலங்கை யாழில். ஊடகவியலாளர் உள்ளிட்ட 6 பேர் கொரோனோவால் மரணம்

யாழில். ஊடகவியலாளர் உள்ளிட்ட 6 பேர் கொரோனோவால் மரணம்

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது-26) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நெடுந்தீவைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் கந்தர்மடத்தைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அல்வாயைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.

தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒருவரது சடலமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவரது விவரங்களைப் பெற முடியவில்லை.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265ஆக உயர்வடைந்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More