83
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
அதில் அரசியல் கைதிகள் குழு விடுத்த வேண்டுகோளின் பேரில், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று சென்றதாகவும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் மறுவாழ்வுக்கு உட்டுபத்தல் மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அவர்களது பிரச்சினைகள் குறித்து தான் கவனம் செலுத்துவேன் என உறுதியளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love