Home இலங்கை தனக்கு தானே தீ மூட்டியவரால், மனைவிக்கும் தீக்காயங்கள்!

தனக்கு தானே தீ மூட்டியவரால், மனைவிக்கும் தீக்காயங்கள்!

by admin

தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ மூட்டி இறந்த குடும்பஸ்தரால் , அவரது மனைவிக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 48 வயதுடைய சோமசுந்தரம் ரவிச்சந்திரம் எனும் 10 பிள்ளைகளின் தந்தையே அவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள தனது சகோதரன் வீட்டுக்கு சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளார்.

அதன் பின்னர் தனது வீட்டுக்கு வந்து உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

இவர் பெற்றோலை உடலில் ஊற்றிக்கொண்டு பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்ற போதே அவரது உடலில் இருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது. அதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.

இவர்களில் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் கூடி தீயினை அணைத்து இருவரையும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

அதில் கணவன் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். மனைவி தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தவரின் தாக்குதலுக்கு இலக்கான அவரது சகோதரனும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More