Home பிரதான செய்திகள் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல

by admin

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் பின்னர் மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நமீபியா , அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை அணி தகுதிச்சுற்றில் விளையாடவுள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை அவா் இலங்கை அணியின் ஆலோசகராக செயற்படவுள்ளார்.

அத்துடன் 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கும் மஹேல இலங்கை இளம் அணியின் ஆலோசகராக செயற்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More