Home பிரதான செய்திகள் கொல்கத்தாவை ஐந்து விக்கெட்டுகளால் பஞ்சாப் வென்றுள்ளது.

கொல்கத்தாவை ஐந்து விக்கெட்டுகளால் பஞ்சாப் வென்றுள்ளது.

by admin

நேற்றையதினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 45ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில்களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் . முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 166 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிக்கட்டத்தில் அந்த அணியின் ஷாரூக் கான் 9 பந்துகளில் 2 சிக்சர்கள் உள்பட ஓட்டங்களைப் பெற்றதனால் இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதேவேளை இன்று நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்சுடன் டெல்லி கப்பிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்சுடன் , சென்னை சூப்பர் கிங்ஸுசும் போட்டியிடவுள்ளன. .

8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணி பிளே ஒப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அதேவேளை 11 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 2 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே-ஒப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More