Home இலங்கை “பென்டோரா பேப்பர்ஸ்” ஊழல் குறித்து விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு!

“பென்டோரா பேப்பர்ஸ்” ஊழல் குறித்து விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு!

by admin

பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று (06.10.21) காலை இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டளஸ் அழகபெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2021/166834

http://globaltamilnews.net/2021/166829

http://globaltamilnews.net/2021/166780

உலக ஊழல் மோசடிப் பட்டியலில் நிரூபமா ராஜபக்ஸவின் பெயரும் அடக்கம்!

October 4, 2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More