Home உலகம் தனிநாட்டுக்காகப் போராடும் டீக்ரே போராளிகள் மீது எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல்

தனிநாட்டுக்காகப் போராடும் டீக்ரே போராளிகள் மீது எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல்

by admin

தனிநாடு கேட்டுப் போராடி வரும் வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. எறிகணைகள், டாங்கிகள், விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகின்ற போதிலும் பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டீக்ரே போராளி குழு தொிவித்துள்ளது.

எனினும் தாக்குதல் குறித்து எத்தியோப்பிய அரசு எதையும் உறுதி செய்யவில்லை. அங்கு தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் நிலைமைகள் குறித்து உறுதி செய்ய முடியவில்லை என சா்வதேச ஊடக தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த வாரத்தில் அரச படைகளின் தாக்குதல் தொடங்கியதாகவும் இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி தொிவித்துள்ளது. 11 மாதங்களாக நீடித்துவரும் இந்த நெருக்கடியால் சுமார் 4 லட்சம் பேர் பஞ்சம் போன்ற சூழலில் வாழ்ந்து வருவதாக கடந்த ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை தொிவித்திருந்தது. இதுவரை நடைபெற்ற சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டப்பட்டதுடன் லட்சக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு வெளியேறிச் சென்றுவிட்டனர்.

பின்னணி

1994-ஆம் ஆண்டு எத்தியோப்பியா இனவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் டீக்ரே. 2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் வரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது. அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் நிறைய சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார்.

எனினும் மத்திய அரசின் அதிகாரத்தை அவர் அதிகாிப்பதாகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் டீக்ரேவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அபிய் அகமது அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என பிரதமர் அபிய் அகமது. அறிவித்தார்

அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதியது.

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் திகதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு அளவை மீறிப் போய்விட்டதாகவும் கூறி அதன் மீது அபிய் அகமது. ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தாா். போர் முடிந்தவிட்டதாக அபிய் அகமது அறிவித்தாலும் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது

மூலம் பிபிசிதமிழ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More