Home இலங்கை வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது!

வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது!

by admin

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த , வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய இரு மீனவர்களையும் நேற்றைய தினம் இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். 


இரு மீனவர்களும் கடந்த 21ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற நிலையில் , இந்திய கோடியக்கரைக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தாம் கைது செய்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 


கைது செய்யப்பட்ட இரு மீனவர்களும் , வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழு ஆய்வாளர் ஊடாக வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 
விசாரணைகளின் பின்னர் இருவரையும் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More