Home உலகம் கொலம்பியாவில் நிலச்சரிவு – 11 பேர் பலி – 20 பேரைக் காணவில்லை

கொலம்பியாவில் நிலச்சரிவு – 11 பேர் பலி – 20 பேரைக் காணவில்லை

by admin

கொலம்பியாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனா். கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றமையினால், அம்மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

 
இந்நிலையில், நரினோ மாகாணத்தின் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதில் மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கின. இதனால் வீடுகளில் வசித்துவந்த பலர் மண்ணுக்குள் புதைந்தனர். 

நம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில் நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காணாமல் போன 20 பேரைத் தேடும் பணிகளை மீட்புக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.