Home இலங்கை சாவகச்சேரியில் வீதியை கடக்க முற்பட்டவர் விபத்தில் உயிரிழப்பு

சாவகச்சேரியில் வீதியை கடக்க முற்பட்டவர் விபத்தில் உயிரிழப்பு

by admin

வீதியை கடக்க முயன்றவர் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டுவில் வடக்கு சந்திரபுரத்தை சேர்ந்த க.லோகநாதன் (வயது65) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் கண்டி நெடுங்சாலையில், சாவகச்சேரி காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்றுவிட்டு வீதியை கடக்க முயன்றபோது,  மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதியான இளைஞன் ஆகிய இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் காயமடைந்தவர்  மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More