Home இலங்கை 47 பேருக்கு மாவீரர் தினம் நிகழ்வுகளை மேற்கொள்ள தடை

47 பேருக்கு மாவீரர் தினம் நிகழ்வுகளை மேற்கொள்ள தடை

by admin

முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள்  நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (17) தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கார்த்திகை  27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2009ஆம்  ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியாத நிலை ஏற்பட்டதனை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு, இரண்டு வருடங்கள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

எனினும்,  ற்போதைய அரசாங்கம் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.

அந்தவகையில் இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் காவல்துறையினா் அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

இதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, ஜயன்கன்குளம் ஆகிய 07 காவல்நிலையங்களை  சேர்ந்த காவல்துறையினாின்   விண்ணப்பத்தின் அடிப்படையில், மேற்படி  47 பேருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா  தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 47 பேருக்கே இந்தத் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.