Home இலங்கை 10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது

10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது

by admin

சட்டவிரோதமான முறையில் 10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவரை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.அம்பாறை வரிப்பத்தான்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த மைதான பகுதியில் இச்சட்டவிரோத செயற்பாடு இடம்பெறவுள்ளதாக  கல்முனை காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை (21) மாலை  கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஜ முத்துக்களை 10 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர்கள் முயன்றுள்ளதாக  விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்கள் மூவர்  மற்றும் சான்று பொருட்கள் யாவும் இறக்காமம் காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.