Home இலங்கை மண்டைதீவு கடலில் படகுகள் மூழ்கின – இரண்டு மீனவர்கள் மீட்பு

மண்டைதீவு கடலில் படகுகள் மூழ்கின – இரண்டு மீனவர்கள் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் மண்டைதீவு முனைக் கடற்பரப்பில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் மூழ்கியுள்ளன எனவும் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

குருநகர் மீனவர்கள் படகுகளில் தொழிலுக்குச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடலில் திடீரென எழுந்து சுழியில் சிக்கி இரண்டு படகுகள் கவிழ்ந்துள்ளன. அவற்றில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து தொழிலுக்குச் சென்ற ஏனைய மீன்பிடிப் படகுகள் திரும்பியுள்ளன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More