Home இலங்கை டிசம்பர் 15ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும்

டிசம்பர் 15ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும்

by admin

தனியார் பேருந்துகளின் உள்ளூர், வெளியூர் மற்றும் கொழும்புக்கான இரவு நேர சேவைகள் என்பன  டிசம்பர் 15 முதல் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு முதல்வர் இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தனியார் பேருந்தின் உள்ளூர் சேவை பேருந்து கள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்தது புறப்பட்டு தற்போது இயங்கி வரும் இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும். அதே நேரம் வெளியிடங்களில் இருந்து வரும் பிரயாணிகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இறக்கப்படுவர்.


இ.போ.ச பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்கும் செல்லும் நீண்ட தூரத்திற்கு பயணிக்கும் இ.போ.ச பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியினூடாக சத்திரச் சந்தியை அடைந்து அங்கிருந்து, கே.கே.எஸ் வீதியூடாக சென்று பிரதான வீதியை அடைந்து வெளிமாவட்டங்களுக்கான பயணத்தினை மேற்கொள்ளும்

அதேபோன்று, வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் இப் பாதையையே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் இப்பாதை ஒழுங்குமுறையானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.


இ.போ.ச பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்குச் செல்லும், நீண்ட தூரத்திற்கு பயணிக்கும்  பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியூடாக வேம்படிச் சந்திக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More