Home இலங்கை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் – மக்கள் போராட்டம்

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் – மக்கள் போராட்டம்

by admin

(க.கிஷாந்தன்)

டயகம காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06/12/2021 அன்று மாலை 5 மணியளவில் சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற  53 வயதுடைய பெண் ஆற்றில் சடலமாக மீட்க்கப்பட்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து இன்று (10) குறித்த தோட்டத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தோட்டத்தில் சுமார் 100 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு  வீதிக்கு இறங்கி பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கறுப்பு கொடி பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக பேரணியாக வந்து, குறித்த பெண் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

காவல்துறையினர் சரியான விசாரணை முன்னெடுத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பிரேத பரிசோதனையின் போது இறந்தவரின் உடலை பார்க்கவிடாமல் பெட்டியினை திறக்கப்படாமல் நல்லடக்கம் செய்ய காவல்துறையினர் அனுமதி வழங்கியதாகவும், ஆற்றில் மிதந்த சடலம் உடையின்றி கிடந்தமையால் இதில் சந்தேகம் நிலவுவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

சந்தேகத்துக்கு இடமான இந்த செயலில் நீதி வேண்டும், முறைக்கேடான விடயங்கள்  நடந்திருப்பின் சட்டத்தின் முன் குற்றவாளியை முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதையும், பிரேத பரிசோதனை அறிக்கை திருப்தி இல்லை எனவும், இது தொடர்பான அறிக்கை காவல்துறையினரால் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.

எனவே காவல்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More