Home இலங்கை 24மணி நேரத்தில் வடக்கு கடலில் 69 தமிழக மீனவர்கள் கைது

24மணி நேரத்தில் வடக்கு கடலில் 69 தமிழக மீனவர்கள் கைது

by admin

யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.


அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை நேற்று 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டு இருந்தது. 

அத்துடன் மன்னார் கடற்பகுதியில் 12 மீனவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கடந்த 24 மணி நேரத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More