Home இலங்கை “பட்டமளிப்பு விழாவில் ஜனநாயகம் வென்றுள்ளது” சந்திரிகா!

“பட்டமளிப்பு விழாவில் ஜனநாயகம் வென்றுள்ளது” சந்திரிகா!

by admin


17ஆம் திகதி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் செயற்பட்ட விதமானது சிறப்பாக அமைந்ததாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மிகவும் அமைதியான முறையில் இந்த மாணவர்கள் தமது உணர்வுகளை வெளிபடுத்தியிருந்தனர் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் பலரும் பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தாலும் பட்டமளிப்பு விழா அன்று இலங்கையின் ஜனநாயகம் வெற்றிகொள்ளப்பட்டது என சுட்டிக்காட்டினார்.

அந்த இளைஞர், யுவதிகள் சிறந்த ஜனநாயக பண்புடன் அவர்களதும் இந்த நாட்டு மக்களினதும் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க துப்பாக்கியில்லாமல் குண்டு இல்லாமல், தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் மிகவும் கௌரவமான முறையில் செயற்பட்டுள்ளார்கள் என்றார்.

அரசாங்கம், அரசாங்கத்தின் பிரதானிகள் இது போன்ற தீர்மானங்களை எடுக்கும் போது, தம்மிடம் கேட்காமல் தம்மை இணைத்துக் கொள்ளாமல் எவரினதும் ஆலோசனையைப் பெறாமல் தவறான தீர்மானத்தை எடுத்து அதனைச் செயற்படுத்தும் போது, விசேடமாக அத்தீர்மானத்தால் பாதிப்பை எதிர்நோக்குபவர்கள் தமது கருத்துகளை வெளியிட சுதந்திரம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

எனவே, இந்த மாணவர்கள் அன்றைய தினம் ஜனநாயகத்தின் உயரிய நிலையை எடுத்துக்காட்டினர். தமது எதிர்ப்பை ஆங்காங்கே சென்று, பைத்தியகாரத்தனமாகக் காட்டாமல் மிகவும் அமைதியாக பலமான எதிர்ப்பை வெளியிட்டனர். இதையே ஜனநாயகம் என கூறுவதாக குறிப்பிட்டார்.

அந்த மாணவர்கள் யார் என தனக்கு தெரியாது. ஆனால் சிரேஷ்ட தலைவர் என்ற ரீதியில் தனது கௌரவத்தை செலுத்துவதாகவும் யார் என்ன சொன்னாலும் அன்று அந்த மாணவர்கள் செயற்பட்ட விதம், 100 சதவீதம் சரியென்றார்.

இந்த மாணவர்களைப் போன்று, நாட்டை நேசிக்கும் ஏனைய இளைஞர்கள், முதியவர்கள் எந்த அரசாங்கத்தில் இவ்வாறு தவறு ஏற்படும் போதும், மாணவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More