Home இந்தியா 22 பயணிகள் உயிாிழந்தமைக்கு காரணமான சாரதிக்கு 190 ஆண்டுகள் சிறை

22 பயணிகள் உயிாிழந்தமைக்கு காரணமான சாரதிக்கு 190 ஆண்டுகள் சிறை

by admin

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் மதலா மலைப்பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் பேருந்தினை விபத்துக்குள்ளாக்கி 22 பயணிகள் உயிாிழந்தமைக்கு காரணமான சாரதிக்கு 190 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

65 பயணிகளுடன் பயணித்த குறித்த தனியாாா் பேருந்தில் பயணித்த பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவார்கள். பேருந்தினை செலுத்திச் சென்ற சம்சுதீன் (வயது 47) என்பவர் பேருந்தை தாறுமாறாக ஓட்டிய நிலையில் பயணிகள் மெதுவாக செல்லும்படி தொிவித்த போதும் அவா் அதனைக் கேட்கவில்லை.

இந்தநிலையில் பேருந்து திடீரென அந்த கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத கால்வாய்க்குள் கவிழ்ந்து தீப்பிடித்தது. பயணிகள் அவசர வழியாக வெளியேற முயன்ற போதும் அந்த கதவில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டு இருந்ததால் திறக்க முடியவில்லை. இதனால் தீயில் கருகி 22 பயணிகள் பலியானதுடன் பலரும் தீக்காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச மாநில நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த . வழக்கை விசாரித்த நீதிபதி பேருந்தினை தாறுமாறாக ஓட்டிச் சென்று 22 பேர் பலியானமையினால் சாரதி சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளாா். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அத்துடன்
பேருந்து உரிமையாளர் ஜிதேந்திர பாண்டே என்பவருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More