
நாடாளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.
தற்போதைய பிரதமரும், ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துரையாடிவிட்டு இவ்வாறு செய்தார்களா? இதன் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க இருந்தாரோ என, கரு ஜயசூரிய கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தானும் தற்போதைய பிரதமரான மகிந்த ராஜபக்ஸவும் கலந்துரையாடியதன் பின்னரே, மிளக்காய்த்தூள் வீசப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. அதுதொடர்பில் தான் வியப்படைந்ததாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment