Home இலங்கை கெடுபிடிகளுக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

கெடுபிடிகளுக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

by admin

மாட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் 1987ஆம் ஆண்டு இறால் பண்ணையில் பணி புரிந்தவர்கள் மற்றும் அகதியாக இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி பொதுமக்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். படுகொலை நடந்த இடத்தில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை 2006 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் இடித்தழித்திருந்தது.


இதனால் இறந்தவர்களின் உறவுகளும் பொது மக்களும் இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இடித்தழிக்கப்பட்ட தூபியினை ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம்(ஜனா) அவர்கள் தனது சொந்த நிதியில்  மீளவும் புனரமைப்பு செய்து இருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பலர் வருடா வருடம் மீண்டும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தற்போதை போதைய   அரசு இறந்த உறவுகளை அஞ்சலி செலுத்த மறுத்து வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (28) காவல்துறையினா் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரெலோவின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) தலைமையில் ரெலோவின் உப தலைவர் நி.இந்திரகுமார்(பிரசன்னா) ரெலோவின் நிதிச் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம் ஆகியோர் மரணித்த மக்களை நினைவு கூர்ந்து தூபியில் சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More