Home உலகம் கனடாப் பிரதமர் பாதுகாப்புக்காக குடும்பத்துடன் இரகசிய இடத்தினை நாடினாா்

கனடாப் பிரதமர் பாதுகாப்புக்காக குடும்பத்துடன் இரகசிய இடத்தினை நாடினாா்

by admin

கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் இரகசிய இடத்தினை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கனடா எல்லையை கடக்கும் பாரவூதி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தாா். இந்த அறிவிப்புக்கு பலமாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதுடன் . கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது.

இதன் காரணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்தில் தங்கியிருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து ஜெனரல் வெய்ன் தனது ருவிட்டர் பக்கத்தில், “ போராட்டக்காரர்கள் தேசிய போர் நினைவிடத்தை இழிவுபடுத்துவதை கண்டு நான் வேதனையடைந்தேன். கனடாவில் முந்தைய தலைமுறைகள் சுதந்திரமான பேச்சு உட்பட நமது உரிமைகளுக்காகப் போராடி மடிந்தன, ஆனால் இவ்வாறு இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்” எனத் தொிவித்துள்ளாா்.

உலக அளவில் கொரோனாத் தொற்று பரவ ஆரம்பித்து இரு வருடங்களுக்கு கடந்து விட்டதுடன் அதன் பல்வேறு வேற்றுருக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அதற்கு தடுப்பூசியே தீர்வு என மருத்துவ நிபுணர்கள் வலுவாக தொிவித்துள்ள நிலையில் தடுப்பூசியா, தனிமனித சுதந்திரமா? போன்ற விவாதங்கள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More