Home இலங்கை சுதந்திர தனத்தில் யாழ் பல்கலை மாணவர்க்கும், காவற்துறைக்கும் இடையில் முரண்பாடு!

சுதந்திர தனத்தில் யாழ் பல்கலை மாணவர்க்கும், காவற்துறைக்கும் இடையில் முரண்பாடு!

by admin

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிடும் வகையிலான பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்ற முற்பட்ட காவற்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

குறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டதையடுத்து பல்கலைகழகத்தின் முன்பாக நேற்று (04.02.22) பிற்பகல் 5 மணி முதல் சிவில் உடையில் புலனாய்வு பிரிவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மாலை ஏழு முப்பது மணி அளவில் முச்சக்கரவண்டியில் சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் காவற்துறையினர் குறித்த பதாகையை கழற்றி முச்சக்கர வண்டியில் வைக்கம் முட்பட்டனர். இதன்போது எதற்காக பதாகையை கழற்றுகிறீர்கள் என மாணவர்கள் பொலிசாரிடம் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் காவற்துறை தலைமையகத்தில் இருந்து தங்களுக்கு இதனை அகற்றுமாறு பணிப்பு விடுக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவர்கள் காவற்துறைனருடன் வாக்குவாதபட்ட நிலையில் உங்களுக்கு பதாகை வேண்டுமெனில் கோப்பாய் காவல் நிலையத்திற்கு வருகை தாருங்கள் என தெரிவித்த காவற்துறைனர் சம்பவ இடத்தை நீங்கிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு நிற துணி கட்டப்பட்டு சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More